பெரம்பலூர், பிப்.7- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து 1800 4252 650 மற்றும் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையம், வருவாய்த்துறை அலுவலகங்களிலோ தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.