மயிலாடுதுறை, பிப்.6- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் சர்மிளா பள்ளியில் திருக்களாச்சேரியை சேர்ந்த பொறியாளர் எம்.ரபீக் என்பவரின் அன்பளிப்பில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அன்புச் சுவர் என்கிற அன்பு பெட்டி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தங்க ளுக்கு தேவையான உடை, பாடப்புத்த கங்கள், மருந்துப் பொருட்கள், வீட்டு உப யோகப் பொருட்கள் என எது தேவையோ அதை கேட்டு கோரிக்கையாக நோட்டில் எழுதி தொடர்பு எண்ணுடன் குறிப்பிட வேண்டும். தேவையான, வாய்ப்புள்ள பொருட்கள் உரிய, தகுதியான நபர்க ளுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது. அதேபோன்று அப்பெட்டியில் பொருட் களை அன்பளிப்பாக அளிக்க விரும்பு பவர்களும் பள்ளி அலுவலகத்தை அணுகி பழைய பொருட்களை தவிர்த்து தரமான புதிய பொருட்களை வைக்கலாம் என குறிப்பிடப்பட்டு இச்சேவை கடந்த 6 மாதங் களை கடந்து செயல்படுகிறது. இதுவரை இந்த அன்பு பெட்டியின் மூலமாக 200-க்கும் மேற்பட்டோர் பயன டைந்துள்ளனர். இச்சேவை பொறையார் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.