districts

img

பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை மீட்டுத் தரக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், நவ.22 - பட்டியலின மக்களின் வழிபாட்டு  உரிமையை மீட்டுத் தர கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், அமைப்பின் மாவட்டச் செய லாளர் கோகுல கிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் செல்வம்,  மாவட்ட நிர்வாகி என். செல்லத்துரை ஆகியோர் சிறப்புரை யாற்றினர். பெரம்பலூர் மாவட்டம், களரம் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேம் பாடி அம்மன் கோவிலில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூஜைகள் மற்றும் சாமி கும்பிடு தல் ஆகியவற்றில், இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்ச னைக்கு தீர்வு கண்டது. மீண்டும் 48 ஆம் நாள் பூஜையையொட்டி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு தலை யிட்டு, பட்டியலின மக்களை கோவி லுக்குள் அழைத்துச் சென்று பூஜை  செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பட்டிலின மக்கள்  மீது போடப்பட்ட பொய் வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என  மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். இல்லையெனில் டிசம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர்கள் தலைமையில் பட்டியலின மக்களை  அழைத்துக் கொண்டு ஆலய நுழைவு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட நிர்வாகிகள், வழக்கறி ஞர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் மற்றும் களரம்பட்டி, அம்மா பாளையம், நக்கசேலம், லாடபுரம், பொம்மனப்பாடி, செஞ்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 200 -க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.