மயிலாடுதுறை, நவ.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஒன்றிய 24 ஆவது மாநாடு ஞாயிறன்று திருக்கடை யூரில் நடைபெற்றது. திருமெய்ஞானம் தியா கிகள் நினைவிடத்திலிருந்து ஒன்றியக் குழு உறுப்பினர் கே.குணசேகரன் தலைமை யில் புறப்பட்ட தியாகிகள் நினைவுச் சுடரை மூத்த தோழர் டி.கோவிந்தசாமி எடுத்து கொடுத்தார். அதனை ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.ஆசிக் ரஹ்மான் பெற்றுக் கொண்டார். டி.மணல்மேட்டிலிருந்து தோழர்கள் எஸ்.சிங்காரம், எஸ்.எத்திராஜ் ஆகியோரின் நினைவாக ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஐயப்பன் தலைமையில் மாநாட்டு கொடி மரத்தை புறப்பட்டது. தில்லையாடியிலிருந்து ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கணேசன் தலைமையில் தோழர்கள் டி.கே.பழனி வேல், பி.திருமுடி நினைவுக் கொடி கயிறும், கொத்தங் குடி ஊராட்சி வேலம்புதுக் குடியிலிருந்து ஒன்றியக்குழு உறுப்பினர் என்.சந்திர மோகன் தலைமையில் தோ ழர்கள் ஜரோன், பஷீர் அக மது ஆகியோர் நினைவுக் கொடியும் புறப்பட்டன. முன்னதாக தில்லையாடி ஆர்ச் அருகிலிருந்து பறை யிசையுடன், செந்தொண்டர் அணிவகுப்புடன் பிரதிநிதி கள் பேரணியாக மாநாடு நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் எம்.கண்ணை யன் ஏற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் காபிரியேல் வரவேற்றார். மாநில செயற் குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. வெண்ணிலா வாழ்த்தி பேசினார். எளிய மக்களுக்கு விரோதமாக செயல்படுகிற திருக்கடையூர் அமிர்த கடேஷ்வரர் ஆலயத்தை அற நிலையத்துறையை ஏற்று நடத்த வேண்டும். பொறை யார், திருக்கடையூர், சங்கரன்பந்தல், தரங்கம் பாடி பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளை சீர மைத்து மேம்படுத்த வேண்டும். காந்தியடி களுக்கு தமிழை கற்று தந்தவரும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனா ருக்கு இறுதி வரை உதவி வந்த தில்லையாடி வேதி யம்பிள்ளை பற்றிய வர லாற்றை பாடப்புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். திருக்கடையூ ரில் உள்ள பழமையான அரசு விதைப் பண்ணையை மேம்படுத்தி விதை சுத்தி கரிப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பின்னர், 17 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டு, அதன் செய லாளராக ஏ.ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். புதிய ஒன்றியக் குழு அறி வித்து மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் நிறைவுரை யாற்றினார்.