புதுக்கோட்டை, அக்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு கீழாத்தூரில் வியாழக்கிழமை நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செய லாளராக ஆ.குமாரவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோழர்கள் எஸ்.ராஜ சேகரன் (முன்னாள் எம்எல்ஏ), வி.அண்ணா மலை ஆகியோர் நினைவ ரங்கில் நடைபெற்ற மாநாட் டுக்கு என். தமிழரசன், அன்ன லெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் பி.காந்திநாதன் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ராஜா வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.குமரேசன் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. மதியழகன் உரையாற்றி னார். மாநாட்டை வாழ்த்தி மாவட்டச் செயற்குழு உறுப்பினர், த. அன்பழகன் மாவட்டக்குழு உறுப்பினர் கி. ஜெயபாலன், கவிஞர் ரெ. வெள்ளைச்சாமி ஆகி யோர் பேசினர். தேர்ந்தெ டுக்கப்பட்ட புதிய ஒன்றியக் குழுவை அறிமுகம் செய்து மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் 11 பேர்கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய ஒன்றியச் செயலாள ராக ஆ. குமாரவேல் தேர்வு செய்யப்படடார். முடிவில் ரெத்தினகுமார் நன்றி கூறினார்.