districts

img

அரியலூரில் இளம்பெண் மரணம் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூன் 11-

      அரியலூர் அருகே அல்லிநகரம் கிரா மத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகள் அபிநயா (23). இவர் அரியலூரில் உள்ள தனியார் மளிகை கடையில் வேலை பார்த்த நிலையில், பார்த்திபன் (32) என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாக காத லித்து வந்துள்ளார்.  

     இந்நிலையில் பார்த்திபனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதை  அறிந்த அபிநயா,  இதுகுறித்து உடையார் பாளையத்திற்கு திருமண பத்திரிகை கொடுக்க வந்த பார்த்திபனிடம் கேட்டு உள்ளார்.

    பின்னர் வாக்குவாதம் ஏற்பட்ட நிலை யில், பார்த்திபனே வீட்டில் கொண்டுவந்து விடுவதாக கூறி அபிநயாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று, தத்தனூர்  கீழவெளி சாலையில் விபத்தை ஏற்படுத்திய தில் அபிநயா உயிரிழந்தார். இந்த சம்ப வத்தையொட்டி அபிநயாவின் காதலன் பார்த்திபனை காவல்துறையினர் கைது செய்தனர்.  

   இந்நிலையில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் சார்பில் அரியலூர் அண்ணா  சிலையருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், காவல்துறையினர் உரிய  விசாரணை நடத்த வேண்டும், அபிநயா வின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும், மேலும் குற்றவாளிக்கு கடுமை யான தண்டனை வழங்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது.  

   இதில், மாதர் சங்கம் மாவட்ட செயலா ளர் டி.அம்பிகா தலைமையில் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, திருச்சி மண்ட லச் செயலாளர் முடிமன்னன், தமிழ் பேரரசு,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோ வன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எ.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்டத்  தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்ட துணைச்  செயலாளர் சிற்றம்பலம், போக்குவரத்து கழக ஓய்வூதிய நல அமைப்பு மாவட்டச் செய லாளர் எம்.சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.