கும்பகோணம் ஜூலை 20
ஆடிக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி யானார்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு கும்ப கோணத்திற்கு பூஜை பொருட்கள் வாங்கு வதற்காக சுவாமிமலை இருந்து இருசக்கர வாக னத்தில் கும்பகோணம் நோக்கி சுவாமி மலை யைச் சேர்ந்த திவ்யா என்கிற வள்ளி (37, கீழ மாஞ்சேரியைச் சேர்ந்த சோபனா (33) இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்
கும்பகோணம் அருகே பழைய பேட்டை மாங்குடி ரோட்டில் சென்ற போது பலத்த காற்று வீசியது அப்போது சாலையில் உள்ள மரம் முறிந்து இவர்கள் மீது விழுந்தது அதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த திவ்யா என்கிற வள்ளி உயிரி ழந்தார் அவருடன் பயணித்த சோபனா பலத்த காயங்களுடன் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கும்பகோணம் தாலுகா காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.