districts

img

தஞ்சையில் உருவாகும் மரகதப் பூஞ்சோலை திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் ஆய்வு

தஞ்சாவூர், மார்ச் 1-  தஞ்சாவூரில் ரூ.25 லட்சம்  செலவில் உருவாகி வரும் மர கதப் பூஞ்சோலை பணி களை, திருச்சி மண்டல  தலைமை வனப் பாதுகாவ லர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். தமிழக முதல்வரின் சிறப்பு அறிவிப்பின்கீழ், அனைத்து மாவட்டங் களுக்கும் மரகதப் பூஞ் சோலை உருவாக்கும் திட்டத் தில், தஞ்சாவூரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே தமிழ்ப்  பல்கலைக்கழக வளாகத் தில் கடற்பசு உருவத்துடன் கூடிய சங்க இலக்கிய மரத் தொகுதிகளுடன் இப்பூங்கா உருவாக்கப்பட்டு வரு கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் ந.சதீஷ் நேரில்  ஆய்வு செய்து, இதில்  தனிச்சிறப்பாக மேற்கொள் ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட வன அலு வலர் தலைமையிலான குழுவினரிடம் விளக்கினார். பணிகளை தரமாகவும், குறிப் பிட்ட காலத்துக்குள் முடிக்க  வேண்டும் எனவும் அறி வுறுத்தினார். இந்த பூஞ்சோலையில், கடற்பசு முழு உருவச்சிலை, சங்க இலக்கிய மரங்கள்,  மலர் செடிகள்,  நிழல் ஓய்வி டங்கள், மூத்தோருக்கான நடைபாதைகள் மற்றும் குழந் தைகளுக்கான விளை யாட்டு கருவிகளுடன் கூடிய  சூழல்களும் உருவாக்கப் படுகின்றன என மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி கூறினார். ஆய்வின் போது வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.