districts

img

தா.பழூர் ஒன்றியத்தில் தனி வட்டாட்சியர் ஆய்வு

அரியலூர், பிப்.5 - அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்தில் 30  ஆண்டுகளுக்கு மேலாக  வாழ்ந்து வரும் ஆதிதிரா விட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. அதன் முதற்கட்ட விசா ரணையாக, தனி வட்டாட்சி யர் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் விஸ்வநாதன் கிராம உதவி அலுவலர் கோபி ஆகியோர் கொண்ட  குழுவினர், புலன் எண்.27/ 60-இல் உள்ள நிலத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் செந்தில்வேல், ஊராட்சி மன்றத் தலைவர் கதிர்வேல்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.