districts

img

ஆர்பிஎஸ் மில் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்

கும்பகோணம், ஆக.12 -  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருச்சேறை, இஞ்சிகொல்லை ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்த தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சேறை கடைவீதியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் டி. என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனி வேல், மாதர் சங்க தஞ்சை மாவட்ட பொறுப் பாளர் அறிவுராணி உட்பட ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கண்டன உரையாற்றினர். திருச்சேறை ஊராட்சி, உடையார்கோ வில் பகுதி சுகாதார வளாகத்தை புதுப்பிக்க  வேண்டும். திருக்குளம் தென்கரையில் உள்ள கழிவறையை மக்கள் பயன்பாட் டிற்கு உடனே திறக்க வேண்டும். திருச்சேறை  ஊராட்சி ஓரான் தோப்பு தெருவில் பல ஆண்டுகளாக சாலை போடப்படாமல் உள்ளது. உடனே தார்ச் சாலை அமைக்க வேண்டும். சாரநாத பெருமாள் கோவில், சர பேஸ்வரர் கோவில் இடத்தில் பக்தர்கள் வசதிக் காக கழிவறை கட்டித் தர வேண்டும்.  ஆர்பிஎஸ் மில் அருகில் அடிக்கடி விபத்து  ஏற்படுவதால் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும். திருச்சேறை, இஞ்சிக் கொல்லை ரேசன் கடைகளில் எண்ணெய்  பருப்பு, மண்ணெண்ணெயை அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் வழங்க வேண்டும்.  நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் வாய்க்கால்களை தூர்வாரி குளம் குட்டை களில் தண்ணீர் சேமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.