தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு மதுரை, பிப். 12- மதுரை கள்ளிகுடியைச் சேர்ந்த லிங்க சாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “மர்மமான முறையில் உயிரிழந்த தனது மகன் காளையனின் உடலை மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் மறு உடற்கூராய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்த ரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தன பால், “மனுதாரரின் மகன் காளையன், மாற்று சமூகத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் பேசியதால் அவரது உற வினர்கள் காளையனை மிரட்டியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்த நிலை யில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது மகனை கொலை செய்து விட்டதாக வும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. காளையனின் உடலில் காயங்கள் இருந்த நிலையில், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் எவ்விதமான காயமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இது ஏற்கத் தக்கது அல்ல, ஆகவே மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். அரசு தரப்பில், “ உடற்கூராய்வின்போது எவ்விதமான காயங்களும் இல்லை. காளையின் உடல் அழுகும் நிலையில் உள்ளது. ஆகவே மறு உடற்கூராய்வு செய்வது சாத்தியமில்லை” என தெரி விக்கப்பட்டது. மனுதாரரது மகன் மர்மமான முறை யில் உயிரிழந்துள்ளார். உடற்கூராய்வு செய் யப்பட்டாலும், அது வீடியோ பதிவு செய்யப் படவில்லை. மனுதாரரிடம் தகவல் தெரி விக்காமலேயே உடற்கூராய்வு நடை பெற்றுள்ளது. ஆனால் அதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே விசாரணை சரியான முறையில் நடைபெறு வதை உறுதி செய்ய மறு உடற்கூராய்வு செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வ தும் அவசியம். ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் காளையனின் உடல், மறு உடற்கூராய்வு செய்யும் நிலையில் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு மறு உடற்கூராய்வு செய்ய முடியும் என்றால், தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு கிடைக் கப் பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். அவரும் பெற்றுக் கொள்ள வேண்டும்” என உத்தர விட்டு வழக்கை முடித்துவைத்தார்.