districts

img

10 ஆண்டாக சீரமைக்காத கரடு முரடான சாலை

கொள்ளிடம், ஆக.30- ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் உள்ள கரடு முரடான சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் ரயில் நிலையம் அருகே ஓம் சக்தி நகர் மற்றும் தோப்பு தெரு  ஆகிய பகுதிகளுக்கு தார்ச்சாலை பிரிந்து செல்கிறது. சுமார் 2 கி.மீட்டர் தூரம் உள்ள இந்த தார்ச்சாலையை மேம்படுத்தி 10 வருடங்களுக்கு மேலாகிறது. இதனால்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். குறிப்பாக, கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட  பகுதிகளில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாக னங்களில் செல்லும் பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே  விழுந்து காயமடைகின்றனர். ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த சேவை மைய கட்டிடத்துக்கு செல்லும் பிரதான சாலை யாகவும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது உள்ளது. இந்த சாலையை  மேம்படுத்த கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே, இந்த சாலையை மேம்படுத்த உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.