districts

img

ரயில் நிலையத்தில் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை பராமரிக்க வேண்டுகோள்

ரயில் நிலையத்தில் புதர் மண்டிக்கிடக்கும்  பகுதிகளை பராமரிக்க வேண்டுகோள்

பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ளது பாபநாசம் ரயில் நிலையம். இங்கு, சாலையை ஒட்டி, ரயில்வேக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் அளவுள்ள இடம் காலி மனையாக உள்ளது. இதில் தேவையற்ற சீமை கருவேலம், செடிகள், கொடிகள், புற்கள் மண்டி கிடக்கின்றன. மழை நாட்களில் காலி மனையில் மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியாவதுடன், சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது. இதன் அருகில்  பாபநாசம் தலைமை அஞ்சலகம், பாபநாசம் புதிய பேருந்து நிலையம், குடியிருப்புகள் உள்ளன. பாபநாசம் ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பாபநாசம் ரயில் நிலையத்திற்கு வருமானம் உள்ள நிலையில், ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதுடன், காலி மனையாக உள்ள இடத்தைச் சுற்றி வேலி அமைத்து, மூலிகைச் செடிகள், புங்கன் உள்ளிட்ட மரக் கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம். இந்த காலி இடம் திறந்தவெளி கழிப்பிடமாகவும், பாராகவும் பயன்பட்டு வருகிறது. பாபநாசம் பகுதியில் பொழுது போக்கிற்கு வழியில்லாத நிலையில், பூங்கா அமைத்து கட்டணம் வசூலிக்கலாம். ரயில் பயணிகளுக்கும் இது பயனளிக்கும். இதன் மூலம் ரயில்வேக்கும் வருமானம் வரும். ரயில்வே நிர் வாகத்தால் முடியாத பட்சத்தில் எம்.பி நிதி, தனியார் வங்கிகள், சேவை அமைப்புகளின் பங்களிப்புடன் இதை மேற்கொள்ளலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.