districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

திருவாரூர், டிச.11-  பல்வேறு அரசியல் கட்சி யில் இருந்து விலகி, ஒன்பது  குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை திருவாரூர் மாவட்டம், கொர டாச்சேரி ஒன்றியம் காட்டூ ரில் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரத்தில் செங்கொடி ஏற்றி, கட்சியில் இணைந்த 15 புதிய தோழர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். கட்சி யின் கொரடாச்சேரி ஒன்றியச்  செயலாளர் டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் கள்  எஸ்.தம்புசாமி, கே.சீனி வாசன் மற்றும் ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.