மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.