சிபிஎம் கண்டனம் மயிலாடுதுறை, ஜூலை 28 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் அருகேயுள்ள கருவாழக்கரை மேலையூரில் இயங்கி வரும் அழகுஜோதி அகாடமி சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகளான ரோஷினி ராஜாம்மாள் (13) அழகுஜோதி அகாடமி சி.பி.எஸ்.சி. பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தேர்வின்போது காப்பிய டித்ததால் மாணவியை சக மாணவி களுக்கு முன்பு முட்டிப் போட வைத்து அவ மானப்படுத்தியுள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி வியா ழனன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள் ளார். வெளியே சென்று வந்த மாணவியின் தாயார் கதறி அழுததைக் கேட்டு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மாணவியை மீட்டு, மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோ தனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை மேற்கொண்டனர். தங்களது மகளை பள்ளியில் முட்டி போட வைத்து அவமானப் படுத்தியதால்தான் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்டார் என மாணவி யின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் பள்ளியான அழகுஜோதி பள்ளியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கை யாகி வருகிறது. ஏற்கனவே அங்கு பணி யாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பணியின் போதே மர்மமாக உயிரிழந்தார். பள்ளியின் விளம்பரத்திற்காக மாண வர்களை கொடுமைப்படுத்துகின்றனர். அதன் விளைவாகத்தான் மாணவி காப்பிய டித்ததாக கூறி சக மாணவர்கள் முன்பாக அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் அக்குழந்தை தற்கொலை செய்து இறந்துள் ளது. மாணவர்கள் தேர்வில் அதிக மதிப் பெண்களை பெற்றால், அதை வைத்து விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், மாணவியை முட்டி போட வைத்து அவமானப்படுத்தியதால் இச்சம்ப வம் நடந்துள்ளது. உடனடியாக அப்பள்ளி யில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தியுள்ளார்.