தஞ்சாவூர், பிப்.8- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி யைச் சேர்ந்தவர் ஹாசிம். இவர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். இவரது மனைவி உமைரா சப்ரின், இவர் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில், மகப்பேறு சிறப்பு மருத்துவ ராக பணியாற்றி வருகிறார். உமைரா சப்ரினுக்கு, தனியார் மருத்துவமனை யில் பெண் குழந்தை பிறந் தது. திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை யில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட் டார். ஐந்து நாள் மருத்து வர்களின் போராட்டத்தால் குழந்தை குணமடைந்து, தற் போது நலமுடன் உள்ளது. இந்நிலையில் உமைரா சப்ரின் தந்தையான, தனி யார் குழந்தைகள் நல மருத்துவர் ஹாஜா மைதீன், அவரது நண்பர் மருத்துவர் ராம்பிரகாஷ் ஆகிய இரு வரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டிற்கு, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வென்டிலேட் டர் கம்ப்ரசர் கருவியை புதன் கிழமையன்று தலைமை மருத்துவர் அன்பழகனிடம் வழங்கினார். எனது பேரக்குழந் தைக்கு ஏற்பட்ட நிலைமை போல, வேறு குழந்தைக்கு ஏற்பட்டால், அவர்களை காப் பாற்ற முடியாமல் போய் விடக் கூடாது என்பதற்காக வும், மருத்துவர்களின் சேவையை பாராட்டி நன்றிக் கடனாக வழங்கியதாக மருத்துவர் ஹாஜாமைதீன் தெரிவித்தார்.