பாபநாசம், செப்.19- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான சாலைகளுள் ஒன்றாகும். இந்த சாலையில் தினமும் ஏராளமான வாக னங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை கடந்த மகா மகத்திற்கு முன்பு போடப்பட்டதாகும். சாலை போட்ட பின்னர், பலமுறை பேட்ச் ஒர்க் மட்டுமே செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தச் சாலை புதிதாகப் போடப்பட்டு வருகிறது. பாபநாசம் பேரூராட்சிப் பகுதிக் குள் புதிதாக இந்த போடப்பட்ட ஒரு மாதம்கூட ஆக வில்லை. அதற்குள் ஆங்காங்கே சில இடங்களில் பள்ள மாகி விட்டது. எனவே, இந்தப் பள்ளத்தை விரைவாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.