districts

சித்திரை திருவிழா கூட்டத்தில் கொள்ளையடிக்க திட்டம்

மதுரை, ஏப்.23- மதுரை திருநகர் ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் முரளி (வயது 66). இவர், கட்ராபாளையத்தில் உள்ள லாட்ஜ்ஜில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது, விடுதிக்கு கடந்த 20 ஆம் தேதி அதிகாலை மத்திய  பிரதேசத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 8 பேர் வந்தனர். அவர்கள், அந்த லாட்ஜில்  2 அறைகளை எடுத்து தங்கினர். மறுநாள் காலையில் முரளியும் அவருடன் பணிபுரியும் அரசகுமாரும் பணியிலிருந்தனர்.அப்போது, அந்த வடமாநில வாலிபர்கள், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, முரளி தண்ணீர் எடுத்துக்  கொண்டு அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் அனைவரும், மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வரும் பக்தர்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டுமென இந்தியில் பேசி உள்ளனர். மேலும், கொள்ளையடிப்பதை தடுக்க யாராவது வந்தால் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பிக்க வேண்டும் என்றும் பேசினர்.  8 பேர் கைது இதனை கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த முரளி, இதுகுறித்து திடீர்நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவல்துறையினர் விடுதிக்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில், அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஷத் (வயது 28), அன்வர் ஷா (வயது 40) மற்றும் 6 பெண்களான சமிம் ஷா (35), ஹின்னா கான் (35), சப்னா ஷா (38), ஜெய்டா ஷா (42), ராஜாக் ஷா (44),  ருக் ஷனா (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை  தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த மிளகாய் பொடி, நகை களை எளிதாக கழட்டி எடுக்க பயன்படும் 2 கொரடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.