districts

திருச்சி முக்கிய செய்திகள்

இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர், அக்.19- பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூரில் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில், வெள்ளியன்று, வறுமை எதிர்ப்பு தினம் கடைப்பிடிப்பு மற்றும் சட்ட உதவி, சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. முகாமில் தலைமை வகித்து பேசிய வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட  உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதிபதி நடுவ ருமாகிய செ.பியர்வத்ராஜ் ஆறுமுகம் பேசுகையில், “மக்களிடையே நிலவும் வறுமையை ஒழிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை அளிப்ப தற்கும் வட்ட சட்டப்பணிகள் குழு எப்போதும் துணையாக  இருக்கும். ஏழை, எளிய மக்கள் சட்டங்களை தெரிந்து கொள்வதற்கு சட்டப் பணிகள் குழு தங்களை நாடி வந்துள்ளது. பொதுமக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளை தாக்கல் செய்வதற்கும், வழக்கறிஞர்களை வைத்து வாதாட வசதி இல்லாதவர்களுக்கு நீதிமன்றம் செல்லா மல், செலவு இல்லாமல், தங்களது குறைகளை மனுக்களாக  அதற்குரிய ஆவணங்களுடன் சட்டப் பணிகள் குழு மூலம்  நாடினால் உடனே தீர்வு காணப்படும்” என்றார். இதில் வழக்கறிஞர்கள் வேல்முருகன் மற்றும் திரு ஞானம் ஆகியோர் சட்டப்பணிகள் குழுவின் பணிகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். சட்டப் பணிகள் குழு விற்கு வர முடியாதவர்கள் கட்டணமில்லா தொலைபேசி  எண்.15100 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், அக்.19 - தஞ்சாவூர் விற்பனைக் குழு, கபிஸ்தலம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். இதில் கும்பகோணம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிரா மங்களில் இருந்து 146 விவசாயிகள், 121 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். இதில் கும்பகோணம், செம்ப னார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 5 வணிகர்கள் கலந்துகொண்டு அதிக பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7,809, குறைந்தபட்சம் ரூ.5,909,  சராசரி ரூ.6,869 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ.8 லட்சம்.

“போதை பொருள் இல்லாத தமிழ்நாடு”  விழிப்புணர்வு குறும்படம்

பெரம்பலூர், அக்.19 - பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தில் பெரம்ப லூர், குரும்பலூர், அம்மாபாளையம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் காணும் வகையில் போதையில்லாத தமிழ்நாடு குறும்படங்கள் திரையிடப் பட்டன. இக்குறும்படங்களை பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 405 மாணவர்களும், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 244 மாணவர்களும், அம்மா பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 501 மாணவர் களும் என மொத்தம் 1,150-க்கும் மேற்பட்ட மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்தரங்கம் 

தஞ்சாவூர், அக்.19 -  தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியின் உள்தர மதிப்பீட்டு குழு, நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் பாலின சமத்துவ அமைப்பு ஆகியவை சார்பில் “பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதி காரமளித்தல்” என்னும் தலைப்பில் ஒரு நாள்  கருத்தரங்கம் நடைபெற்றது.  இக்கருத்தரங்கத்திற்கு மருதுபாண்டியர் கல்வி  நிறுவனங்களின் தலைவர்  மற்றும் நிர்வாக அறங்கா வலர் கொ.மருதுபாண்டி யன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எம்.விஜயா, துணை முதல்வர் ஆர்.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிறப்பு விருந்தினராக மன்னர் சரபோஜி அரசு கல்லூரியின் மேனாள் பொரு ளாதாரத் துறை இணை  பேராசிரியரும், செம்போடை  ஆர்.வி.எஸ் கல்லூரியின் மேனாள் முதல்வருமாகிய பி.நடராஜன் உரையாற்றி னார்.

கஞ்சா விற்ற 3 பேர் கைது

புதுக்கோட்டை, அக்.19 - கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்களை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோகர்ணம் போலீசா ருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்குசென்ற போலீசார், நரிமேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்த பி.சஞ்சீவி (18), பி.சிலம்பரசன் (21) மற்றும் மேல 3 ஆம் வீதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஆகிய  3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, 2 கைப்பேசி களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிலம்பரசன் மீது  ஏற்கனவே 3 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.  17 வயது இளைஞர் நீதிக் குழுமத்தின் முன் ஆஜர்ப டுத்தப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக் கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

புதுக்கோட்டை, அக்.19 - சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டச் சிறைக்குள் மரத்தில் ஏறி குதித்து தற்கொலைக்கு முயன்ற வர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி  சனிக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்ஜிஆர் நகரைச்  சேர்ந்தவர் கருப்பையா மகன் சக்திவேல் (21). இவர்  மாடு திருடிய வழக்கு ஒன்றில் அறந்தாங்கி போலீசா ரால் கைது செய்யப்பட்டு கடந்த அக்.5 ஆம் தேதி முதல்  புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந் தார். இந்நிலையில், கடந்த அக்.13 ஆம் தேதி காலை  சிறைக்குள் இருந்த மரத்தின் மீது ஏறியவர் அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட சக்திவேலுக்கு, அக்.14 அன்று  அறந்தாங்கி நடுவர் நீதிமன்றத்தில் பிணையும் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதாரண நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். புதுக் கோட்டை நகரக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடு போன 100 கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர், அக்.19 - தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல் போன 100 கைப்பேசிகளை மீட்டு, உரியவர்களிடம் காவல் துறை யினர் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, பெரிய  கோயில் உள்பட மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் காணாமல் போன  கைப்பேசிகளைக் கண்டுபிடித்து தருமாறு பாதிக்கப்பட்ட வர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில் நகரக் காவல்  துணைக் கண்காணிப்பாளர் இரா.சோமசுந்தரம் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் எம். கலைவாணி தலைமையில், உதவி ஆய்வாளர் சம்பந்தம்  உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் திருட்டு மற்றும் காணா மல் போன கைப்பேசிகளை தஞ்சாவூர் மற்றும் பல்வேறு  மாவட்டங்களில் தனி நபர்கள் பயன்பாட்டில் வைத்திருப்பது  தெரிய வந்தது. இதையடுத்து, ரூ.7 லட்சம் மதிப்புள்ள 100 கைப்பேசிகளை காவல்துறையினர் மீட்டனர். இவற்றை  உரியவர்களிடம் நகரக் காவல் துணைக் கண்காணிப்பா ளர், ஆய்வாளர் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

தெருநாய்கள் தொல்லையை  கட்டுப்படுத்த கோரிக்கை 

தஞ்சாவூர், அக்.19-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடை பெற்றது. ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார்.  இதில் உறுப்பினர்கள், “ஏனாதிக்கரம்பை மாயம்  பெருமாள் கோவில்குளம் தூர்வாரப்பட வேண்டும். சித்துக்காடு - அம்மையாண்டி சாலையை சீரமைக்க வேண்டும். நாடங்காட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு  மயானக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும்.  நாய்களால் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதால் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பைங்கால் - சாணாகரை சாலை மற்றும் இணைப்பு சாலை களை சீரமைக்க வேண்டும். ஒட்டங்காடு பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக் குறையாக உள்ளதால் ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு  செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் பேசுகையில், “உறுப்பினர்களின் கோரிக் கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொன் றாக நிறைவேற்றி தரப்படும்” என உறுதியளித்தார்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பெரம்பலூர், அக்.19 - பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சனிக்கிழமை தனியார் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைத்து, முகாமினை பார்வையிட்டார். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் கொ.வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆகியோர் தலைமை வகித்தனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணுசந்திரன் திட்ட விளக்கவுரையாற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இந்த முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள MRF உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 142 முன்னணி தனியார் நிறுவனங்களும், 03 திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன. முகாமில் மொத்தம் 4,232 பேர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 522 பேருக்கு உடனடி பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வழங்கினார்.