மயிலாடுதுறை, அக்.19 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் வதிஷ்டாச்சேரி ஊராட்சி அரசூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. அரசூர் கிராமத்தைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிலையில் வெள்ளியன்று அரசூரில் நடைபெற்ற சிறப்பு கிளை பேரவையில், சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பவுல் சத்தியராஜ், ஒன்றிய தலைவர் கார்த்திக்கேசன், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். புதிய கிளை அமைக்கப்பட்டு, அதன் செயலாளராக சுல்தான் ஆரிப், தலைவராக ராஜேஷ், துணைத் தலைவராக தமிழ்செல்வன், துணைச் செயலாளராக யாசர், சமூக வலைதள கிளைச் செயலாளராக முகமது பாசித், ரத்த தான கிளைச் செயலாளராக வினோத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.