districts

img

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கும் இயற்கை ஆர்வலர்

மயிலாடுதுறை மாவட்டம், பரச லூர் ஊராட்சி செம்பனார்கோ விலைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் இரணியன்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற் காக “புவி காப்பு இயக்கம்” என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டு வருகிறார். இவர்  ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஷேல் கேஸ் திட்டத்திற்கு எதி ராக போராடியதற்காக 2019 இல் சிறை சென்றவர். மரக்கன்று விநியோகம் மற்றும் விழிப்புணர்வு தற்போது மாவட்டம்  முழுவதும் இலவசமாக மரக்கன்றுகளை  வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களில்  மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை விநியோகித்துள்ளார். பரசலூர்  ஊராட்சியில் மட்டும் 20,000 மரக்கன்றுகளை  வாய்க்கால்கள், குளங்கள், சாலையோரங் கள் மற்றும் வீடுகளில் நட்டுள்ளார். பள்ளி  மாணவர்களிடையே மரம் வளர்ப்பின்  முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை யும் ஏற்படுத்தி வருகிறார். மரக்கன்று வகைகள் சந்தனம், செம்மரம், மகாகனி, வேங்கை,  ரோஸ்வுட், பலா, நெல்லி, நாவல், விலா மரம் போன்ற பல்வேறு வகை மரக்கன்று களை மக்களின் விருப்பத்திற்கேற்ப வழங்குகிறார். மாற்று விவசாய முறைகள் மலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்  என்று கருதப்பட்ட மிளகு, ஏலக்காய், ஜாதிக் காய், கிராம்பு போன்ற நறுமணப் பயிர்களை சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்க முடியும்  என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து வருகிறார். குறிப்பாக, கிளேரியா மற்றும் கிளுவை போத்துகளை பயன்படுத்தி மிளகு சாகுபடி செய்யும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளார். மேலும், தென்னை தோட்டங்களில் ஜாதிக்காய் வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் வழி முறைகளையும் விளக்கி வருகிறார். “காலநிலை மாற்றத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். இதைத் தடுக்க மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டும்” என்கிறார் இரணியன். - செ.ஜான்சன்