வேதாரண்யம், ஜன.4 - வெள்ளப்பள்ளம் கடற்கரை யோரத்தில் மியான்மர் நாட்டு தெப்பம் ஒன்று வியாழனன்று கரை ஒதுங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரையில் மியான்மர் நாட்டி லிருந்து மரச் சட்டங்களால் செய்யப் பட்ட தெப்பம் ஒன்று கரை ஒதுங்கி யுள்ளது. வெள்ளப்பள்ளம் கடற்கரையில், படகு வடிவிலான தெப்பம் ஒன்று வியா ழனன்று மதியம் மிதந்து வந்துள்ளது. அதைப் பார்த்த மீனவர்கள், அந்த தெப்பத்தை கட லில் இருந்து மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். மரச் சட்டங்களால் ஆன தெப்பம் 15 அடி அகலமும், 15 அடி உயரம் கொண்டதாக வடி வமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டுள் ளது. அதில் மெழுகில் செய்யப்பட்டு பித்தளை கலரில் வர்ணம் பூசிய ஒரு சிலை மற்றும் பூஜை பொருட்கள், பீங்கான் பொருட் கள், மெழுகுவர்த்தி, விசிறி உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. தெப்பம் இரவு நேரத்தில் ஒளிர, அதில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தெப்பம் மியான்மர் நாட்டில் புத்த மத திருவிழாக்களின் போது கடலில் விடப்பட்டதா அல்லது மியான்மர் நாட்டில் இறந்தவர்களின் அஸ்தியை வைத்து கடலில் விடப்பட்டதா என கடலோர காவல் குழும போலீசார் மற்றும் உளவுப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடலில் வீசிய காற்றின் காரணமாக, திசை மாறி சுமார் 1000 கிலோ மீட்டர் கடந்து வந்த இந்த தெப்பம், வெள்ளப்பள்ளம் கடற்கரை யில் கரை ஒதுங்கியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.