திருவாரூர், பிப்.11- சிபிஎம் குடவாசல் ஒன்றியக்குழு உறுப்பினரும், வாலிபர் சங்கத்தின் முன்னாள் ஒன்றியச் செயலாளருமான கா. பகத்சிங் படத்திறப்பு அன்னவாசலில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மறைந்த தோழர் பகத்சிங் படத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, தோழர் பகத்சிங் படத்திற்கு சந்தன மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. லெனின், நகரச் செயலாளர் டி.ஜி. சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். லெட்சுமி மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், கட்சித் தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.