districts

img

குளித்தலை பகுதியில் தொடர் கனமழை நெல் நாற்று நட தயாராக இருந்த நூறு ஏக்கரில் சூழ்ந்த மழைநீர்

விவசாயிகள் வேதனை கரூர், அக்.15 - கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளப்பள்ளி, கருப் பத்தூர், வீரவள்ளி பகுதி யில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது குறுவை சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் நிலத்தினை உழுது விதை நெல் நாற்று போட்டுள்ளனர். நெல் நாற்று நடவுக்கு தயாராக இருந்த நிலையில், கள்ளப்பள்ளி மற்றும் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. இத னால் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது. வாழை, வெற்றிலை கொடிக்கால் பகுதிகளி லும் தண்ணீர் தேங்கி உள்ளது. நெல் நாற்று  நடவு செய்வதற்கு தயாராக இருந்த 100  ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் தண்ணீர்  முழங்கால் அளவு நிற்பதால் நாற்று நட  முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். நாற்றுகள் நீரில் மூழ்கியதால் விவசாயி கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வரு கின்றனர். உழவு செய்து, பயிரிட்ட இப்ப ணிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் புதிதாக நெல் நாற்று நடும் பணிகளை மேற்கொண்டால் கூடு தல் செலவு ஏற்படும். வடிகால் வாய்க்கால் களை சரியாக தூர்வாராமல் இருந்ததே இதற்கு காரணம். எனவே வடிகால் வாய்க்கால் களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க தமிழக அரசும், கரூர் மாவட்ட  நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.