கரூர்,ஜன.2- கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி ஒன்றியம், பள்ளப் பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள மக்கள் ஆட்டோ ஸ்டாண்டின் (சிஐடியு) பனி ரெண்டாம் ஆண்டு துவக்க விழா, புதிய பெயர் பலகை திறப்பு விழா, 2025 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழா நடை பெற்றது. விழாவிற்கு சங்கத்தின் கிளை தலைவர் எஸ்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.இப்ராஹிம் வரவேற்று பேசி னார். ஆட்டோ சங்கத்தின் கொடியை மாவட்ட தலை வர் என்.ரங்கராஜ் ஏற்றி வைத் தார். ஆட்டோ சம்மேளன மாநில உதவிச்செயலாளர் என்.பாண்டியன் பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, சிபிஎம் அர வக்குறிச்சி ஒன்றிய செயலா ளர் எம்.ஆறுமுகம் ஆகி யோர் பேசினர். ஆட்டோ சங்க மாவட்ட உதவி செயலாளர் ஏ.சக்கரைமுக மது, காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டேண்ட் நிர்வாகி கள் பாபர்பாட்சா, ரிபாய்தீன், சுலைமான்சேட், சாகுல் ஹமீது உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.