பரப்பலாறு அணை நிரம்பியது: தண்ணீர் திறப்பு
ஒட்டன்சத்திரம், டிச.13- ஒட்டன்சத்திரம் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணை நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதானல் வடகாடு மலைக்கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளவான 90 அடியில் 88 அடி இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதானல் அணை நிரம்பியது. இதனையடுத்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை சார்பில், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு அணை திறக்கப்பட உள்ளதாகவும், அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அணையில் இருந்து 3 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 4100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆற்றின் வழியாக இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்குச் செல்கிறது.
தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து
மதுரை, டிச.13- மதுரை பெரியார்பேருந்து நிலையத்திலிருந்து திருவாதவூர் பகுதிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. இந்த நிலையில் மாட்டுத்தாவணியை அடுத்துள்ள உத்தங்குடி அருகே அரசுப் பேருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் பிரேக்கை அழுத்திய போது, பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே சுதாரித்த ஓட்டுநர் பேருந்தினை சாலையோரம் இருந்த அணுகுசாலையில் திருப்பினார். இந்த நிலையில் பேருந்து சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் மற்றும் இதர வாகன ஓட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் இழுவை வாகனம் கொண்டு வரப்பட்டு, பேருந்து அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் உத்தங்குடி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்புப் பணி: கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி
தேனி ஆட்சியர் தகவல் தேனி, டிச.13- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமாகத் திகழும் முல்லைப்பெரி யாறு அணை தமிழக-கேரள எல்லை யில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையின் சார்பில், முல்லைப்பெரி யாறு அணைப்பகுதியில் ஆண்டுதோ றும் மராமத்துப் பணி மேற்கொள்ளப் படுவது வழக்கம். இந்நிலையில் பொ துப்பணித்துறையின் சார்பில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி, தேனியிலிருந்து 2 தனியார் லாரிகளில் தளவாடப் பொருள்களை ஏற்றிக் கொண்டு, இடுக்கி மாவட்டம், குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரி யாறு அணைக்கு கொண்டு சென்றனர். சோதனைச் சாவடியில் முல்லைப் பெரி யாறு அணைக்கு பொருள்கள் எடுத்துச் செல்ல கேரள வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக் கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியரால், தமிழ் நாடு அரசின் கூடுதல் தலைமைச்செய லாளருக்கு (நீர்வளத்துறை) தகவல் தெரிவிக்கப்பட்டுமுல்லைபெரியாறு அணைப் பகுதிக்கு கட்டுமானப் பொருட் களை கொண்டு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு- தனியார் மருத்துவமனை கட்டமைப்புகளை உறுதி செய்க! தமிழக அரசு-மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் வேண்டுகோள்
திண்டுக்கல், டிச.13- திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத் துவமனை கட்டமைப்பு களை உறுதி செய்ய தமிழக அரசும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சி யின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள சிட்டி எலும்பு முறிவு மருத்து வமனையில் வியாழனன்று இரவு பெரும் தீ விபத்து ஏற் பட்டது. லிப்டில் சிக்கி 4 வயது சிறுமி உள்பட 6 பேர் உயிரி ழந்துள்ளனர். தமிழகத் தையே உலுக்கியுள்ள இந்த தீ விபத்து பெரும் சோகத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. பலி யானவர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. திண்டுக்கல் மாவட் டத்தில் ஏராளமான தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? இருப்பது முறையாக பராமரிக்கப்படு கிறதா? என்பதை அந் தந்த துறை வல்லுநர்கள், அதிகாரிகள் ஆண்டுக் கொருமுறை ஆய்வு செய் வது நல்லது. தீயனைப்பு சாதனங்கள் வைக்கப்பட் டுள்ளனவா? தீ விபத்து ஏற்பட்டால் தானியங்கி தீய ணைப்பு சாதனங்கள் முறை யாக பராமரிக்கப்படுகிறதா? இதே போல் மின் சாதனங் கள் சிறப்பாக செயல்படு கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேவையான படுக்கை வசதிகள் உள்ளனவா? விபத்து காலங்களில் நோயாளிகள் வெளியேற அவசர வழிகள் அமைக்கப் பட்டுள்ளனவா? போதிய ஸ்டெச்சர்கள், ஆக்சிஜன் கருவிகள், அவசர கால மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றனவா, மருத்துவ மனைக்கென்று ஆம்புலன்சு கள் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மேற்கண்ட வசதிகள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, டிச.13 - புதுக்கோட்டையில் மூடப்பட்ட 158 ஆண்டுகள் பழமையான ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம், தொடர்ந்து இங்கேயே செயல்படுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஒன்றிய அரசை நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சு.வெங்கடேசன், துரை.வைகோ, எம்.எம்.அப்துல்லா ஆகி யோர் வலியுறுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம் சுமார் 158 ஆண்டுகள் பழமையானது. மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்படும் அஞ்சல்கள் அனைத் தும், இரவு இங்கு வைத்து பிரிக்கப் பட்டு, தொடர்புடைய ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களில் உள்ள ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகங்களை மூடிவிட்டு, அருகிலுள்ள பெரிய பிரிப்பகங்களு டன் இணைப்பதற்கு ஒன்றிய அஞ்சல் துறை முடிவு செய்தது. இதன்படி, புதுக்கோட்டை ஆர்எம்எஸ் பிரிப்பகம் கடந்த டிச.9 ஆம் தேதியுடன் மூடுவ தற்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், புதுக்கோட்டை உட்பட தமிழ்நாட்டில் 10 இடங்களில் இயங்கி வந்த ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடக்கூடாது என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். இந்நிலையில், டிச.9 ஆம் தேதியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சிஐடியு, வாலிபர், மாதர், மாணவர் அமைப்பு களும் புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அலு வலகம் முன்பாக முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொ டர்ந்து, புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அலு வலகம் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து இயங்கும் என திருச்சியி லிருந்து வந்த அதிகாரிகள் எழுத்துப் ்பூர்வமாக உறுதியளித்தனர். வாக்குறுதி மீறல் அதிகாரிகள் அளித்த எழுத்துப் பூர்வமான வாக்குறுதியை அன்றே அதி காரிகள் மீறிவிட்டனர். அன்று இரவே புதுக்கோட்டை அஞ்சல்கள் அனைத் தும் திருச்சியிலிருந்து வந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் இங்கு பணியாற்றி வந்த பணியாளர்களும் திருச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அலுவலகம் மூடப்பட்டது. அமைச்சருடன் சந்திப்பு இந்நிலையில், புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை மீண்டும் இங்கேயே செயல்பட அனு மதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மக்களவை உறுப்பினர் (மதிமுக) துரை வைகோ, வியாழக் கிழமை தில்லியில் மத்திய தகவல் தொ டர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அவர் அளித்த கடிதத்தில், “புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் செயல்படுகிறது. கட்டடத்தின் ஒரு பகுதி போட்மெயில் விரைவு ரயிலுக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதால், கட்டட வாடகை, மெயில் மோட்டார் ஒப்பந்தச் செலவு போன்ற செலவு களும் அரசுக்கு இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை ஆர்எம்எஸ் பிரிப்ப கத்தை உட்கோட்ட மையமாக மேம்படுத்தி மீண்டும் செயல்படுத்திட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிந்தியா உறுதியளித்துள்ளார் என எம்.பி., துரை வைகோ தெரிவித்தார். இதேபோல, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அவரிடமும் அமைச்சர் நம்பிக்கையுடன், மீண்டும் புதுக்கோட் டையிலேயே ஆர்எம்எஸ் அலுவலகம் செயல்பட உறுதியளித்துள்ளதாக அப்துல்லா தெரிவித்தார்.