districts

img

நாகப்பட்டினம் மாவட்டம் ஒக்கூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்டம் ஒக்கூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை கீழ்வேளூர் சட்டமன்ற நாகைமாலி துவக்கி வைத்தார். இம் முகாமை காரைக்கால் ஓஎன்சிசி நிர்வாகம், மீனாட்சி மிஷன் நிர்வாகம்,ஒக்கூர் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து நடத்தின. நிகழ்வில் ஓஎன்சிசி நிர்வாக அதிகாரி உதய்பஸ்வான், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், கீழ்வேளூர் வட்டார ஆத்மா குழுத் தலைவர் ப.கோவிந்தராஜன், ஆத்மா குழு உறுப்பினர் கா.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.