districts

img

கடன் பெற்ற பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய பைனான்ஸ் நிறுவன ஊழியர்

திருச்சிராப்பள்ளி, செப்.3 - தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற பெண்ணை, தற்கொ லைக்கு தூண்டிய பைனான்ஸ் ஊழியர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்ச நல்லூர் மேற்கு ஒன்றியம் தீராம்பாளை யம் பகுதியில் வசித்து வருபவர் விசா லாட்சி. கூலித் தொழிலாளியான இவர், மண்ணச்சநல்லூரில் செயல்பட்டு வரும் சக்கரா பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.40, 000 கடன் பெற்றிருந்தார். கடனுக்கான தொகையை தொடர்ந்து  செலுத்தி வந்தார். அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று  வந்த நிலையில், கடைசி 4 தவணைகளை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. இதனால், சக்கரா நிறுவனத்தின் ஊழி யர் கடந்த சனிக்கிழமை விசாலாட்சி வீட் டிற்குச் சென்று கடனை கேட்டுள்ளார். அதற்கு விசாலாட்சி எனது உடல்நிலை சரி யில்லாததால் தவணையை செலுத்த முடியவில்லை. அடுத்த வாரம் செலுத்தி  விடுகிறேன் என்று கூறியதாக சொல்லப் படுகிறது. வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டி... அதனை ஏற்க மறுத்த பைனான்ஸ் ஊழியர், விசாலாட்சியை தகாத வார்த்தை யால் திட்டி, “கடனை கொடுக்க முடிய வில்லை என்றால் நீ செத்துப்போ, உனது இன்சூரன்சை நாங்கள் க்ளைம் செய்து கொள்கிறோம்” என்று கூறி, விசா லாட்சியை வீட்டிற்குள் தள்ளி, கதவை  பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டார்.  உடனே அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் கதவின் பூட்டை உடைத்து அவரை மீட்டுள்ளனர். இதனால் மனமு டைந்த விசாலாட்சி, அவமானம் தாங்க  முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு  முயன்றார். இதையறிந்த அவரது உறவி னர்கள், அவரை உடனடியாக சிகிச்சைக் காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் விசாலாட்சியின் உறவி னர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைமையில், மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்று பைனான்ஸ் நிறுவன ஊழியர் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு  கொடுத்தனர். ஆனால் கடந்த 4 நாட்க ளாக இதுகுறித்து வழக்குப் பதிய வில்லை. எவ்வித நடவடிக்கையும் போலீ சார் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் விசாலாட்சியை  தரக்குறைவாக பேசி வீட்டிற்குள் வைத்து  பூட்டிச் சென்று, தற்கொலைக்கு தூண்டிய  சக்கரா பைனான்ஸ் நிறுவன ஊழியர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலி யுறுத்தியும் கட்சியின் மேற்கு ஒன்றியக்  குழு சார்பில் செவ்வாயன்று மண்ணச்ச நல்லூரில் உள்ள சக்கரா பைனான்ஸ் நிறு வனம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செய லாளர் மனோகரன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடரா ஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பூமாலை, ஆணைமுத்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன், துறையூர் ஒன்றியச் செயலா ளர் குமார் ஆகியோர் பேசினர். ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் மற்றும் விசாலாட்சி குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.