அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், அனைத்து துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், 3,440 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.