districts

திருக்கடையூர் ஆணைகுளத்தில் படகு குழாம் அமைக்க வேண்டும்

மயிலாடுதுறை, அக்.16- மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூர் ஆணைக்குளத்தில் படகு குழாம் அமைத்துத் தர வேண்டுமென தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சரிடம் திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயக்குமார் கோரிக்கை மனு அளித்துள்ளார். தரங்கம்பாடியில் உள்ள புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை மற்றும் கவர்னர் மாளிகை பழமை மாறாமல் புதுப்பிக்கப் பட்டு வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்று லாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் வருகை தந்தார்.  அப்போது திமுக மாவட்டச் செயலாளர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னி லையில் செம்பனார்கோயில் மத்திய ஒன்றியச் செயலாளர் அமுர்த விஜயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.  அதில், “திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஏராள மான பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளி மாநி லங்களிலிருந்து வந்து வழிபாடு செய்கின்ற னர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திருக்கடையூர் ஊராட்சியை சுற்றுலா தலமாக  முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2008-2009 ஆம் ஆண்டு அறிவித்து, சிறப்பாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன. இங்கு தினமும் அதிகளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால், இந்த ஊராட்சியில் அமைந்துள்ள ஆனை குளத்தை சுத்தம் செய்து நான்கு புறமும் படித்துறைகள் அமைக்க வேண்டும். மேலும், படகு போக்குவரத்து வசதியுடன் கூடிய படகு குழாம் மற்றும் பூங்கா ஆகியவை  சுற்றுலாத்துறை மூலம் அமைத்து தர வேண்டும். திருக்கடையூர் கோயிலின் சாலை  மார்க்கத்தில் நுழைவாயில் (ஆர்ச்) அமைத்து தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.