கும்பகோணம், டிச.14- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு நல்ல காற்றோட்ட வசதி இருப்பதற்காக, 50 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனை வளாகம் முழுவதும் பல வகை மரங்கள் நடப்பட்டு இயற்கை சூழல் இருந்தது. இந்நிலையில் நவீன மருத்துவ கருவிகள் வைப்பதற்கும், பல ஊர்களிலிருந்து உள் மற்றும் வெளி நோயாளிகள் வருகை அதி கரிப்பாலும் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில், சில மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தூங்குமூஞ்சி மரம் பலத்த மழையினால் திடீரென அடி வேரோடு முறிந்து சாய்ந்தது. அப்போது நோயாளிகள், அவர் களது உறவினர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால், உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்த உடன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று பார்வை யிட்டு, உடனடியாக அந்த மரத்தை அகற்ற அறிவுறுத்தினார். பின்னர், பொதுப் பணித் துறை கட்டுமான உதவிச் செயற்பொறி யாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவ லர்கள், தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து, மின் இணைப்பை துண்டித்து விட்டு, மரத்தை அகற்றினர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மருத்துவமனைக்குள் இருக்கும் மரங்களை ஆய்வு செய்கின்றனர்.