districts

img

‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், ஆக.12 -

    தமிழ்நாடு முழுவதும் “போதைப் பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகின்றன.

     பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  பள்ளி-கல்லூரிகளிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வெள்ளியன்று நடைபெற்றது. பெரம்ப லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வீடியோ வாக னத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மாண வர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.  

அரியலூர்

     அரியலூர் காமராஜர் ஒற்றுமைத் திடலில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கே.பெரோஸ்கான் மற்றும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதி ராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முன்னதாக, போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியானது அரியலூர் நக ராட்சி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி  முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் ஒற்றுமைத் திடலில் நிறைவு பெற்றது. சிறுவளூர்  அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி க்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஜெயங்கொண்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. பெரோஸ்கான் அப்துல்லா பங்கேற்றார்.

அரசு போக்குவரத்துக் கழகம்

     கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தலைமையகத்தில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை, முதுநிலை துணை மேலாளர் கே.டி.கோவிந்தராஜன் தலை மையில் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொழிலாளர்கள் எடுத்து கொண்டனர். துணை, உதவி மேலாளர்கள், ஓட்டுநர்கள், நடத்து நர்கள், தொழில்நுட்பம் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் பங்கேற்றனர்.

பாபநாசம்

     பாபநாசம் காவல்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடந்தது. தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவின் பேரில்  பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் பயணி கள், ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாபநாசம் டி.எஸ்.பி பூரணி தலைமை வகித்தார். கபிஸ்தலம் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் குமார், கோவிந்தராஜ் மற்றும் போலீசார் துண்டு  பிரசுரம் வழங்கினர்.

மயிலாடுதுறை

     மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரி மற்றும் பொறையார் காவல் துறை இணைந்து நடத்திய போதை பழக்கத் திற்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. கல்லூரியின் தேசிய இளைஞர் செஞ்சி லுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஜே.நெல்சன்  அமிர்தராஜ், மயிலாடுதுறை மாவட்ட தேசிய  இளைஞர் சிலுவை சங்கத்தின் பொருளாளர்  முனைவர் ஜி.வி.பாண்டியன் மற்றும் பொறை யார் காவல் நிலைய உதவி ஆய்வாளர். மகா லட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.