திருச்சிராப்பள்ளி, மார்ச் 23- விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோரின் 92 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி மாவட்டத் தில் 25 இடங்களில் வீரவணக்கம் செலுத்தியும், போதைக்கெதிரான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவெறும்பூர் பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாநகர் மாவட்டத் தலைவர் பா.லெனின் சங்கக் கொடியை ஏற்றினார். இதேபோல், பர்மா காலனி, காந்தி நகர், செல்வபுரம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பகுதிச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட துணைச் செயலாளர் யுவ ராஜ் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை பழைய பேருந்து நிலை யத்தில் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு, வாலிபர் சங்கம் தஞ்சை மாநகர் துணை செயலாளர் எம்.நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசு ராஜா, முன்னாள் மாவட்டச் செய லாளர் வீ.கரிகாலன், முன்னாள் மாநகரச் செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, துணைக் குழுவில் 20 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். சிபிஎம் திருவையாறு -பி கிளைச் செயலாளர் பி.சுமிதா தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா மற்றும் நிர்வா கிகள் பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் ஒன்றி யங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக ளில் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திருக்கடை யூர், பூதனூரில் மாவட்டத் தலைவர் ஐயப்பன், ஒன்றியச் செயலாளர் பவுல் சத்தியராஜ் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மற்றும் வேப்பந் தட்டையில் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்தி வேல், மாவட்டத் தலைவர் எஸ்.கே. சரவணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.கோகுலகிருஷ் ணன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி.ரமேஷ், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.கலையரசி, சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூரில் சிபிஎம் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றி யக்குழு சுபர்ணா தலைமையில் பகத்சிங் படத்திற்கு மாலை அணி வித்து வீரவணக்கம் செலுத்தப் பட்டது. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.