districts

திருச்சி மண்டலத்தில் 91 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு: 15 பேர் கைது

மத்திய மண்டல ஐஜி தகவல் திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- திருச்சி மத்திய மண்டலத்தில் மொத்தம் 91 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி லும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவர் துறைத் தலைவர் க.கார்த்திகேயன் தெரி வித்துள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாரா யம் குடித்த சம்பவத்தில் வெள்ளிக் கிழமை வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையும் பல்வேறு சோத னைகள், கைது நடவடிக்கைகள், சாராய  ஊறல்கள் அழிப்பு உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி மத்திய மண்ட லத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகை யில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறைத் தலைவர் (ஐஜி) க.கார்த்திகேயன் தெரிவித்ததாவது: மத்திய மண்டலத்தில் அனைத்து மாவட் டப் பகுதிகளிலும் காவல்துறை கண்காணிப் பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஏராள மான போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் புழக்கத் தில் உள்ளதாக சந்தேகப்படும் பகுதிகளில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டு, வழக்கு களும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட வாரியாக, திருச்சி மாவட்டத்தில் 4 வழக்குகளும், புதுக் கோட்டையில் 7, கரூரில் 17, பெரம்பலூரில் 12, அரியலூரில் 4, தஞ்சாவூரில் 11, திருவா ரூரில் 24, நாகப்பட்டினத்தில் 8, மயிலாடு துறையில் 4 என மொத்தம் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராய வழக்குகளில் ஏற்கெனவே, குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் 15 பேர் மீது கைது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்க னவே சாராய வழக்குகளில் தொடர்பு வைத்தி ருந்த 1,265 பேரிடம் விசாரணையும் நடத்தப் பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில், கடந்த ஒரு வரு டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக 203 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் 197 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதுடன், மேலும் சில மாதங்களுக்கு தொடர்ந்து தினசரி 200 சோதனைகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நாளில் நடத்திய சோதனையில் மட்டும் ரூ. 3.20 லட்சம்  மதிப்புள்ள சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு,  தொடர்புடைய பொருட்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.