districts

வேடசந்தூர் அருகே கொள்ளைபோன ரூ.90 லட்சம் கரூர் நிதி நிறுவன அதிபருக்கு சொந்தமானது 3 புரோக்கர்கள் கைது

ஒட்டன்சத்திரம், ஜூன் 28-

      வேடசந்தூர் அருகே கத்தி முனையில் கொள்ளையடிக்கப் பட்ட ரூ.90 லட்சம் பணம்கரூர் நிதி நிறுவன அதிபருக்கு சொந்தமா னது என்று தெரியவந்துள்ளது. இந்த பணம் தங்களுக்கு சொந்த மானது என்று நாடகமாடிய 3 புரோக்கர்களை கைது செய்தனர்.

    கரூர் ஆண்டாங்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 57) . இவர் தனது நண்பர் கள் திருப்பூரை சேர்ந்தவர் ஷாஜ கான் (வயது 38). இவரது நண்பர் கள் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ சேகர்(வயது 39), கரூர் ஆண்டாங்  கோவில் தெருவை சேர்ந்த குண சேகரன்(வயது 49) ஆகியோரை தொடர்புகொண்டு தன்னிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக ரூ1 கோடி உள்ளது. அதை ரூ 500 நோட்டுக்  களாக ரூ 90 லட்சமாகமாற்றிக் கொடுத்தால், அதன்மூலம் ரூ.10 லட்சம் கமிஷன் கிடைக்கும் என்று சக்திவேல் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஷாஜகான் உள்ளிட்ட 3 பேரும் ரூ.90 லட்சம்  மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு களை சூட்கேஸ் பெட்டியில் எடுத்  துக்கொண்டு எரியோடு அருகே  உள்ள கொண்டமநாயக்கனூ ருக்கு காரில் வந்தார்.

   அங்கு பணத்தை பெற்றுக் கொண்ட சக்திவேல் மற்றும் அவ ரது கூட்டாளிகள் ஆயுதங்களைக் காட்டி, ஷாஜகான் மற்றும் அவரு டன் வந்த ராஜசேகர், குணசேக ரன் ஆகியோரை மிரட்டினர். அவர் களிடம் இருந்து கார் மற்றும் செல்  போன்களையும் பறித்தனர்.

     இந்த கொள்ளை குறித்து ஷாஜ கான் உள்பட 3 பேரும், எரியோடு காவல் நிலையத்தில்புகார் தெரி வித்தனர்.  

சக்திவேல் உள்ளிட்ட 9 பேர்  கொண்ட கொள்ளை கும்பலை  பிடிக்க காவல் ஆய்வாளர்கள் எரியோடு வேலாயுதம், வடமதுரை ஜோதிமுருகன் மற்றும் எஸ்.பி. தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். சக்திவேல் வைத்துள்ள செல்  போன் மற்றும் அவர் பணத்துடன்  கொள்ளையடித்துச் செல்லும் போது ஷாஜகான் உள்ளிட்ட 3 பேரி டம் பறித்துச்சென்ற செல்போன் களை கண்காணித்து வருகின்ற னர்.

9 பேருக்கு வலைவீச்சு  

     ஜூன் 26 மதியம் 2.30 மணிக்கு  கொள்ளை நடந்துள்ளது. செல் போன்களும் கொள்ளையடிக்கப் பட்டதால் ஷாஜகான், ராஜசேகர், குணசேகரன் ஆகிய 3 பேரும் நடந்தே வந்து கரூருக்கு பேருந்து  ஏறிச்சென்றுநிதி நிறுவன அதிபர்  சுரேசிடம் பணம் கொள்ளைபோன விபரத்தை கூறியுள்ளனர், அன்று  இரவு எரியோடு காவல் நிலையத் திற்கு வந்து நிதி நிறுவன அதிபர்  சுரேஷ் புகார் அளித்தார் . இதன்  பேரில் எரியோடு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து புரோக்கர்கள் ஷாஜகான், ராஜ சேகர், குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கொள்ளை கும்பல் தலைவன் சக்திவேல் உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்ற னர்.