திருச்சிராப்பள்ளி, ஜூன் 30 - திருச்சி ராம்ஜிநகர் மில் பஞ்சாலை தொழி லாளர்கள் சங்க (சிஐடியு) ஆலோசனை கூட்டம் பாலன் தலைமையில் கள்ளிக்குடி சமு தாயக் கூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. வேலை அறிக்கையை சங்க செயலா ளர் சங்கர் வாசித்தார். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ள இழப்பீடுத் தொகை சம்பந்தமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ள ஆலோசனை குறித்து சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், பஞ்சாலை சம்மேளன செயலாளர் அசோ கன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகி யோர் விளக்கி பேசினர். கூட்டத்தில், “820 தொழிலாளர்களுக்கு தரப்பட உள்ள இழப்பீடுத் தொகை குறை வாக உள்ளது. மில்லுக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகள், சிண்டிகேட் அமைத்து மிக குறைவாக ஏலம் விடப்பட்டுள்ளன. அதன் பிறகு பல மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் எடுத்தவர்கள் அதனை விற்றுள்ளனர். இதை கணக்கில் கொண்டு, தற்போது சொல்லப்பட்டுள்ள இழப்பீடு தொகையை கூடுதலாக வழங்க தமிழக அரசு தொழிலா ளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 2007 இல் மூடப்பட்டு 17 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், தாமதம் செய் யாமல் இழப்பீடுத் தொகை விரைந்து கிடைத்திட உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சிதம்பரம் நன்றி கூறினார்.