districts

img

தமிழறிஞர் வீரமாமுனிவர் நினைவு படிப்பகம் 7 ஆம் ஆண்டு துவக்கம்-மலர் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி, பிப்.2 - தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் நினைவு படிப்பகம் 7 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் முனிவர் மலர்  வெளியீட்டு விழா சனிக்கிழமை திருச்சி பெரியவர்சீலி பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு படிப்பக அமைப்பாளர், மூத்த வழக்கறிஞர் வின்சென்ட் தலைமை வகித்தார். புனிதா டேவிட் வரவேற்றார். விழாவில் வீரமாமுனிவர் மலரின்  முதல் பிரதியை பங்குத்தந்தை சூசைநாதன் வெளியிட, அதனை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர் மாவட்ட கெளரவத் தலைவர் முஸ்தபா கமல் பெற்றுக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில  கட்டுப்பாட்டு குழு தலை வர் ஸ்ரீதர், 5 முதல் 8 ஆம்  வகுப்பு வரை முதல் மதிப் பெண் பெற்ற மாணவர் களுக்கும், தட்டச்சில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர் உசேன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பைரவி, ஆசிரியர் கவி யரசு, மாநகராட்சி முன்னாள் அரசு வழக்கறிஞர் வடி வேல் சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜீவா பாரதி நன்றி கூறினார்.