districts

img

மயிலாடுதுறையில் 71 ஆவது கூட்டுறவு வார விழா

மயிலாடுதுறை, நவ.19-  மயிலாடுதுறையில் கூட்டுறவுத்துறை சார்பில் 71 ஆவது கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. 403 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 21 இலட்சத்து 80 ஆயி ரத்து 20 மதிப்பிலான பல்வேறு கடனு தவிகளை மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கி  உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பி னர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மயிலாடுதுறை கூட்டுற வுத் துறையின் சார்பில் நடைபெற்ற 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 21  மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பரிசு களை வழங்கினார். தொடர்ந்து, 403 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன், தனிநபர் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி என மொத்தம் ரூ.2 கோடியே 21 இலட்சத்து 80 ஆயிரத்து 20 மதிப்பிலான கடனுதவியையும், பெருந்தோட்டம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கம், தலச்சங்காடு மகளிர் ஆதிதிராவிடர் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்  ஆகியவைகளுக்கு பதிவு சான்று களையும், சிறப்பாக செயல்படுகின்ற சிறந்த கூட்டுறவு சங்கங்களான 68 சங்கங்களுக்கு பாராட்டு கேடயத்தி னையும், செம்பனார்கோவில் தொடங்க  வேளாண் கூட்டுறவு சங்கத்தில் செயலா ளராக பணியாற்றிய அறிவுடைநம்பி பணியிடைக்காலத்தில் உயிரிழந்த மைக்காக, அவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையையும் அமைச்சர் வழங்கினார்.