districts

img

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7.50 லட்சம் வாக்காளர்கள்

மயிலாடுதுறை, ஜன.22- மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட  சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,22,065 ஆண் வாக்காளர்களும், 1,24,637 பெண் வாக்காளர்களும், 10 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,166 ஆண் வாக்காளர்களும் 1,18,247 பெண் வாக்காளர்களும் 10 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் மற்றும்  பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,32,812 ஆண் வாக்காளர்களும், 1,36,755 பெண் வாக்காளர்களும் 3 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். மொத்தமாக 3,71,043 ஆண் வாக்காளர்களும், 3,79,639 பெண் வாக்காளர்களும், 23 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 7,50,705 பேர்  வாக்காளர் பட்டியலில் உள்ளனர். இறுதியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும் போது தற்சமயம் 12,822 எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். வழக்கம்போல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தற்சமயம் 18,103 வாக்காளர்கள் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 5821 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர் 11,690 நபர்கள், மூத்த குடிமக்கள் 14,425 நபர்கள், மாற்றுத்திறனாளிகள் 8,158 நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மக்களாட்சியை வலுப்படுத்துவதில் தகுதியுள்ள அனைவரும் 100 சதவிகிதம் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதோடு மட்டுமல்லாமல் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கைகளில் பொது மக்கள், தன்னார்ல அமைப்புகள், அரசியல் கட்சியினர் முனைப்புடன் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.  இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை,  அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்டனர்