திருச்சிராப்பள்ளி, ஜூன் 27-
தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டா லின் மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனா ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் திருச்சிராப்பள்ளி முதலிடத்தில் உள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் செவ்வாயன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சியில், மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர பரா மரிப்பு உதவித் தொகை ரூ.1500 ரூ.2,000-மாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் ஏறக்குறைய 10,969 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முத லமைச்சரின் விரிவான மருத்துவக் காப் பீட்டு அட்டை, மனவளர்ச்சி குன்றியோ ருக்கு பராமரிப்பு உதவித்தொகை, தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக் கான பராமரிப்பு உதவித்தொகை, தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவ ருக்கான பராமரிப்பு உதவித்தொகை, சுய வேலைவாய்ப்பு (வங்கிக்கடன்), மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உத வித்தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான பயணச்சலுகை பேருந்து அட்டை, மாநகர் பகுதிகளில் இலவசப் பேருந்து பயணஅட்டை, அரசுப் பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத் திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலி போன்ற திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காதொலிகருவி, கருப்புக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரம், நவீன செயற்கை கால கள், செயற்கை மூடநீக்கு சாதனம் (காலி பர்), பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளி களுக்கு திருமணஉதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடை யாள அட்டை, தேசிய அடையாள அட்டை, கை, கால் பாதிக்கப்பட்டவர், காதுகேளாத பேச்சு குறைபாடுள்ள நபர், பார்வையற்ற வர் ஆகிய மாற்றுத்திறனாளிகளை திரு மணம் செய்துகொண்டால் பட்டதாரி இல் லாத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 மற்றும் எட்டு கிராம் தங்கம் பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50,000 மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங் கப்படுகிறது.
சட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கு சட்டபுத்தகம் வாங்க ரூ. 50,000 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் மாற்றுத்திற னாளிகள் பயனாளிகள் 1865 பேருக்கு, ரூ.62.66 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை, 143 பயனாளிகளுக்கு ரூ.5.87 லட்சம் மதிப்பில் வாசிப்பாளர் உத வித்தொகை, 18739 பயனாளிகளுக்கு ரூ.40 கோடி மதிப்பில் மனவளர்ச்சி குன்றியோர் களுக்கு மாதாந்திர பராமரிப்பு உத வித்தொகை, 1149 பயனாளிகளுக்கு ரூ.2.51 கோடி மதிப்பில் கடுமையாக பாதிக்கப் பட்டோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, 391 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை என மே 2023-வரை பல்வேறு திட்டங்களின் மூலம் 27,998 பயனாளிகளுக்கு ரூ55.70கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.