districts

நகராட்சி ஆணையரின் துணிப் பையில் லஞ்சப் பணம்

தஞ்சாவூர், ஆக.3- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை நகராட்சியில் வெள்ளிக் கிழமை மாலை, நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் (திமுக) தலைமையில், நகராட்சி அலு வலக கூட்ட அரங்கில், மாதாந்திர அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் நகர் மன்றத்  தலைவர்கள், நகர்மன்ற உறுப்பி னர்கள் சென்ற பிறகு, ஆணையர் கும ரன் தனது அறையில், நகராட்சி அலு வலர்களுடன் தனியாக ஒரு கூட்டத்தை  நடத்தியுள்ளார். இதில், ஒப்பந்ததா ரர்கள் சிலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிளான் அப்ரூவல்  உள்ளிட்ட அனைத்திற்கும் பட்டுக் கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும் இந்த  லஞ்சப் பணத்தை முக்கிய பொறுப்பில்  உள்ள பலரும் பிரித்து எடுத்துக் கொள்வதாகவும் புகார் எழுந்தது.  அதன் அடிப்படையில், வெள்ளிக் கிழமை இரவு 8 மணியிலிருந்து சனிக் கிழமை காலை வரை 6 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை காவல்  துணைக் கண்காணிப்பாளர் நந்தகோ பால் தலைமையில், ஆய்வாளர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய குழுவினர் அதி ரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் 80 ஆயிரம் ரூபாயை நகராட்சி உதவிப் பொறியாளர் மனோகரன் மறைத்து வைத்து இருந்ததும், அங்கு  கட்டட அனுமதிக்கு லஞ்சம் கொடுப்ப தற்காக நின்ற ஒப்பந்ததாரர் எடிசன் என்பவரிடம் இருந்து 66 ஆயிரம் ரூபாய் பணத்தையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.   இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புத் துறையினரைக் கண்டதும் ஆணை யர் குமரனின் கார் ஓட்டுநரான வெங்க டேசன், நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவருக்கு வெளியே 8 ஆயிரம் ரூபாய் பணத்தை தூக்கி வீசி யதைக் கண்டு, அதனையும் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து அவரிடம் நடத்திய விசா ரணையில், நகராட்சி ஆணையர் குமரன் தனது அழுக்குத் துணியை ஒரு பையில் வைத்து, அதில், தான் பெற்ற 5 லட்சம் ரூபாயை மறைத்து வைத்து, வீட்டுக்கு எடுத்துச் செல்லு மாறு ஓட்டுநர் வெங்கடேசன் கூறிய தின் பேரில், காரை சோதனை செய்தனர்.  அப்போது, அழுக்கு துணிப் பையில் பணம் சிக்கியது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் குமரன், உதவிப் பொறியா ளர் மனோகரன், ஓட்டுநர் வெங்கடே சன் உள்ளிட்டோர் வீடுகளிலும் அதிரடி யாக சோதனை செய்தனர். இதை யடுத்து, கணக்கில் வராத 6.54 லட்சம்  ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் நகராட்சி ஆணையர் குமரன், உதவிப் பொறியா ளர் மனோகரன், கார் ஓட்டுநர் வெங்கடேசன், ஒப்பந்ததாரர் எடிசன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த னர். பிறகு பறிமுதல் பணத்தை கும்ப கோணம் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் ஒப்படைத்தனர்.