districts

நூறு நாள் வேலைகளில் காலை 6 மணிக்கே பணியிடத்திற்கு வர நிர்ப்பந்திப்பதை நிறுத்த கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தா.பேட்டை ஒன்றிய 15வது  மாநாடு திங்களன்று ஒன்றியத் தலைவர்  தேவி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்க கொடியை மாவட்டத் தலைவர் லிங்கராணி ஏற்றி னார். அஞ்சலி தீர்மானத்தை கோமதி  வாசித்தார். முத்துலெட்சுமி வரவேற் றார். வேலையை அறிக்கை ஒன்றிய செயலாளர் மரகதம் வாசித்தார். மாவட்ட  தலைவர் லிங்கராணி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், தா. பேட்டை பேரூராட்சி 6 வது வார்டு சிபிஎம் கவுன்சிலர் சத்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.மர கதம், துணைத் தலைவராக சி.ஜீவா, செயலாளராக கே.தேவி, துணைச் செய லாளராக சி.மகேஸ்வரி, பொருளாள ராக எஸ்.முத்துலெட்சுமி, ஒன்றியக் குழு  உறுப்பினர்களாக கோமதி, சங்கராந்தி,  அம்பிகா, ஜெயக்கொடி, பானுமதி, மணி மேகலை ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  ரேசன் கடைகளில் கைரேகை முறையை நீக்கி, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். நூறு  நாள் வேலைகளில் காலையில் 6  மணிக்கே பணியிடத்திற்கு வர சொல்லி  தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து  பஞ்சாயத்துகளின் கழிப்பறைகளையும் சீரமைக்க வேண்டும். ஒன்றியத்தில் அனைத்து சாக்கடை, தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.