திருச்சிராப்பள்ளி, ஜூலை 22 - சிஐடியு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் லட்சுமி, சிஐ டியு மாநிலக் குழு உறுப்பினர் செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றுகிற டபிள்யூ.எச்.பி ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியத்தை மகளிர் திட்டத்திடம் வழங்காமல் நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பணி நேரத்தை வரன்முறை செய்ய வேண்டும். கௌரவமான பணிச் சுழலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 30 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார இயக்குநர் அலுவலகம் அரு கில் பெருந்திரள் முறையீடு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.