districts

img

ஓடை நீர் சூழ்ந்து 500 ஏக்கர் நெல் பயிர்கள் நாசம் திருமானூர் விவசாயிகள் வேதனை

அரியலூர், நவ.19 - திருமானூரில் ஓடை நீர் வயலுக்குள்  பாய்ந்ததால் சுமார் 500-க்கும் மேற்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் வேதனையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், ஓடையின்  ஆக்கிரமிப்பை அகற்றி அகலப்படுத்தி தருவதே, தங்களுக்கு நிரந்தர தீர்வா கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் திருமா னூர் மற்றும் தா.பலூர் ஆகிய இரண்டு  ஒன்றியங்களும் டெல்டா பகுதிகளா கும். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாத மாக சம்பா பயிர் சாகுபடி செய்வதில்  விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர். இரு பகுதிகளிலும் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகு படி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் அரியலூர் மாவட்டத் தில் கடந்த 10 தினங்களாக நல்ல  மழை பெய்து வருகிறது. மழைப்பொழி வின் காரணமாக, கரைவெட்டி பெரிய ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த  ஏரிகளில் இருந்து அதிகப்படியான நீர் கலுங்குஓடையில் வழிந்து வெள்ள மாக பெருக்கெடுத்து ஓடுகிறது. கரை வெட்டி ஏரியிலிருந்து கரைவெட்டி, பரதூர், மேலக்காவட்டாங்குறிச்சி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெங்கனூர், முடிகொண்டான் உள்ளிட்ட கிரா மங்கள் வழியாக செல்லும் கலுங்கு ஓடையில் செல்கிறது. இந்த ஓடை பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு குறுகியுள்ளதால் ஓடைகள் செல்லும் நீர், அருகில் உள்ள சம்பா நெல்  பயிர் வயல்களில் புகுந்து செல்கிறது.  இந்த கிராமங்களில் சம்பா நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நெல்  பயிர்களில் தண்ணீர் மூன்றடி உய ரத்திற்கு தேங்கியுள்ளது. ஒரு வார மாக நெல் பயிர்கள் தண்ணீரால் சூழப் பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, நெல் பயிர்  சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை யில் ஆழ்ந்துள்ளனர்.  மூன்று பருவம் விளைவித்த இந்த  பகுதியில் தற்போது சம்பா பயிர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. அந்தப் பயிரும் தற்போது கன மழையின் காரணமாக அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை முற்றி லும் இழந்துள்ளனர். கலுங்கு ஓடை யின் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரு வதன் மூலமாகவே தங்களுக்கு நிரந்தர  தீர்வு கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.