districts

img

துணைப் பாடத்தில் 50 சதவீத தோல்வி: நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 31-  புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் துணைப்பாடத்தில் மட்டும் 50 விழுக்காடு தோல்வி அடைந்ததைக் கண்டித்தும் தோல்விக்கு காரணமான ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு இந்திய மாண வர் சங்கம் மன்னர் கல்லூரி கிளை  தலைவர் எ.தாரணி பிரியா தலைமை  வகித்தார். கிளை செயலாளர்  தனுஷ் முன்னிலை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன், துணைத் தலை வர் வசந்தகுமார்,துணைச் செயலா ளர் அ.பாலாஜி, செயற்குழு உறுப்பி னர் மகாலெட்சுமி, நந்தனா உள்ளிட் டோர் பேசினர்.