தஞ்சாவூர், அக்.5 - தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வா கம் மற்றும் முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளுடன் இணைந்து உயர்கல்வி பயி லும் மாணாக்கர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கும் முகாமை சனிக்கிழமை நடத் தின. முகாமிற்கு மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித் தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, மாநகராட்சி மேயர் சண்.இராம நாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர். 12 வங்கிகள் இம்முகா மில் கலந்து கொண்டன. 128 மாணவ, மாண வியர்கள் விண்ணப்பித்தனர். இம்முகாமில் 68 பேருக்கு ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பி லான வங்கிக் கடனுதவிக்கான காசோலை களை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் வழங்கினார்.