மயிலாடுதுறை, ஜன.4- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரை சேர்ந்த முதியவர் ஒருவர் கிராம உதவியா ளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் வாங்கிய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்யமுடியாமல் ஆண்டுக்கணக்கில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்களோடு அலையும் நிலை நீடித்து வருகிறது. ஆக்கூர் பிள்ளைவிநாயகபுரத்தை சேர்ந்தவர் மருதமுத்து(85). வருவாய்த் துறையில் கிராம உதவியாளராக 40 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற, இவர் செம்பனார்கோவில் அருகிலுள்ள பரசலூ ரைச் சேர்ந்த காமாட்சி என்பவரிடம் 1996-ஆம் ஆண்டு மாமாக்குடி கிராமத்தில் புல எண்கள் 318, 319, 320 ஆகிய எண்கள் கொண்ட நிலத்தை வாங்கி பத்திரப் பதிவும் செய்துள்ளார். இதனிடையே தனக்கு வயது அதிக மாகிவிட்டதால் மாற்றுத்திறனாளியாக உள்ள தனது பேத்தியின் பெயருக்கு நிலத் தினை பட்டா பெயர் மாற்றம் செய்வதற் காக, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சி யரிடம் மனு அளித்துள்ளார். மனுவை ஆய்வு செய்து, பட்டா மாற்றம் செய்வ தற்காக சீர்காழி கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் மருதமுத்து வாங்கிய நிலத் தின் உரிமையாளருக்கு இரு கணவர்கள் இருப்பதாக 1986-ல் செய்யப்பட்ட யுடிஆர் பதிவில் வரு வாய்த்துறையினர் செய்த தவறை சுட்டிக்காட்டி கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் முதியவர் மருதமுத்துவுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துத்தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதுகுறித்து முதியவர் மருதமுத்து கூறும்போது, வருவாய்த்துறையினர் பதி வில் தவறை செய்துவிட்டு என்னை அலை யவிடுகின்றனர். தள்ளாத வயதிலும் 5 ஆண்டுகளாக ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து வருகிறேன். மாற்றுத்திறனாளி யாக உள்ள எனது பேத்தியின் வாழ்வா தாரத்திற்காக, தற்போது பட்டா மாற்றம் செய்யலாம் என முயன்று வருகிறேன். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.