மயிலாடுதுறை, ஜூலை 9 - மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி யின் பித்தலாட்டத்தை கண்டித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர் த. இராயர் ஆகியோர் தலைமையில் வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டப் பொருளாளர் எம்.செல்லப்பன், மாநிலக் குழு உறுப்பினர் பி.குணசுந்தரி, தமிழ் நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், மாவட்டப் பொருளாளர் அ. இராமலிங்கம், சங்க நிர்வாகிகள் சி.மேக நாதன், வைரவன், வழக்கறிஞர் ஞானபிர காசம் உள்ளிட்டோர் விளக்க உரை யாற்றினர். மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி கொண்டத்தூர், பாகசாலை, சேமங்க லம், ஆலவேலி, நத்தம் ஆகிய 5 ஊராட்சிகளை 1976 ஆம் ஆண்டில் தத்தெடுத்து, அந்த கிராமங்களில் விவசா யிகளுக்கு பயிர்க் கடன் கொடுத்துள்ளது. விவசாயிகளும் தாங்கள் வாங்கிய கடனை தொடர்ந்து கட்டி வந்துள்ளனர். கந்துவட்டி போல 5 கிராமங்களிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் சுமார் 6 ஆயி ரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர் செய்து வரும் நிலை யில், காலப்போக்கில் சம்பந்தப்பட்ட ஸ்டேட் பாங்க் அதிகாரிகள் விவசாயி களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்ட தோடு, வட்டி மேல் வட்டி போட்டு கந்து வட்டியைப் போல பணம் பறித்துள்ளனர். சில ஆண்டுகளாக தொடர் இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், முதலீட்டிலும், வங்கிக் கடனிலும் மூழ்கடிக்கப்பட்டு வாழ்வை இழந்து தவிக்கிற நிலையில், வங்கிக் கடனை கட்டச் சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும், வங்கி படுத்தும் கொடுமைகளாலும் இன்னல் களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, குறிப்பிட்ட சில விவசாயி களுக்கு கடனே பெறாமல், கடன் கொடுத்த தாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அதே போன்று விவசாயிகள் வாங்கும் கடனுக்கு காப்பீடு செய்துள்ள தாக பொய் கூறி, காப்பீடு செய்யாமல் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தோ ரிடம் கடனை கட்டச் சொல்லி நிர்ப்பந்திப்ப தாக கூறுகின்றனர். சில லட்சங்கள் மட்டும் கடனாக பெற்றவர்களிடம், பல லட்சம் வரை வட்டியாக வசூலித்துவிட்டு அசல் தொகை இன்னும் உள்ளது என பித்த லாட்டம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். புரோக்கர்கள் மூலம்... வங்கி அதிகாரிகள் சில புரோக்கர் களை வைத்துக் கொண்டு அவர்கள் மூல மாகவே விவசாயிகளுக்கு கடன் தருவ தாகவும், விவசாயிகளிடம் கடன் தொகை எவ்வளவு என வெளிப்படையாக தெரி விக்காமல், கடன்பெறும் நடைமுறைகள் மறைமுகமாகவே செய்யப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். வங்கியின் இத்தகைய அடாவடித் தனத்தை கண்டித்தும், வீட்டுக்கடன் பெற்றவர்களின் பெயரில் காப்பீடு செய்ய தவறிவிட்டு, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்தக் கூடாது. இறந்தவர்களின் பெயரில் உள்ள கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். அப்பாவி ஏழை மக்களிடம் கடன் தருவ தாக கூறி, முன்தொகையுடன் புதிய கணக்கு துவங்க செய்து ஏமாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 5 கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜூ (கொண்டத்தூர்), கோமதி மதியழகன் (பாகசாலை), மு.ராஜதுரை (சேமங்கலம்), அலமேலுமங்கை ரஞ்சித் (ஆலவேலி), பிரீத்தி செந்தில்குமார் (நத்தம்) மற்றும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற் றனர். போராட்டத்தை தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் விவசாயிகள் சங்க தலைவர் களுடன் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுவதாக வும், நிபந்தனைகளை தளர்வு செய்வதாக வும், கடன் பெறாத விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து உரிய ஆய்வு செய்வதாகவும் உறுதியளித்தனர். இததையடுத்து போராட்டத்தை தற்காலிக மாக விலக்கி கொண்டனர்.