districts

img

சீகன்பால்கு ஓவியக் கண்காட்சியை 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

அருங்காட்சியக இயக்குநர் தகவல் மயிலாடுதுறை, மார்ச் 27 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் சீகன்பால்கு வாழ்ந்த வீட்டில்  “சீகன்பால்கு பணியின் தடயங்கள் தேடல்” என்ற தலைப்பில் 44 நாட்கள்  நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை சுமார் 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள் ளனர்.  ஜெர்மனி நாட்டின் புகழ்பெற்ற ஓவி யர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்ட இந்த கண்காட்சியை, ஜெர்மன் நாட்டு தூதர் மிஹேலாகி யுஹிலா, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் முனைவர் கிறிஸ்டி யன் சாம்ராஜ், திருச்சபை நிர்வாகத்தி னர், அருங்காட்சியக இயக்குநர் சாமு வேல் மனுவேல் முன்னிலையில் திறந்து  வைத்தார்.  சீகன்பால்கு வாழ்ந்த காலத்தில் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றியும்,  தற்போதைய கலாச்சாரம் பற்றியும், கல்வி முறைகளையும் மையக் கருத்தாக  வைத்து அமைக்கப்பட்ட கண்காட்சியை த.பே.மா.லு கல்லூரி, புனித தெரசா கல்லூரி, தூய ஜான் பள்ளி, சர்மிளா பள்ளி, ஹோப் பவுண்டேசன் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும் மயிலாடுதுறை, திருவா ரூர், சென்னை, பெரம்பலூர், திருப்பூர்,  ஈரோடு, அரியலூர், ஜெயங்கொண்டம், மதுரை, கோவை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாண வர்கள், ஆசிரியர்கள் மற்றும் டென்மார்க், ஜெர்மனி, சிங்கப்பூர், போலந்து, பிரான்ஸ், ஜப்பான், சுவிட்சர் லாந்து, அமெரிக்கா ஆகிய நாடு களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், ஓவியர்கள் என 5 ஆயிரத்திற்கும் அதிக மானோர் கண்காட்சியை பார்வை யிட்டுள்ளதாக சீகன்பால்கு அருங்காட்சி யக இயக்குநர் டாக்டர் சாமுவேல் மனு வேல் தெரிவித்துள்ளார்.